Posts

Showing posts from November, 2020

சத்தம் கேட்கும் ஆடு

Image
சத்தம் கேட்கும் ஆடு அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது - (யோவான் 10:4). 2001-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 11ம் தேதி கடத்தப்பட்ட வானூர்தி (Aeroplane) அமெரிக்காவில் உள்ள பென்டகனில் மோதிய போது, அநேக மக்கள் அங்கு வேலை செய்பவர்கள் உள்ளே இருந்தனர். அவர்கள் அங்கு அந்த பிளேன் மோதியதால் உண்டான பயங்கரமான புகை மண்டலத்திற்குள் சிக்கி, புகை அவர்கள் கண்களை மறைத்தபடியால், வெளியே வர முடியாமல், மிகவும் அவதிக்குள்ளாயினர். அவர்கள் அங்கு மூச்சு விட முடியவில்லை, சரியாக காண முடியவில்லை. அப்போது ஐசக் ஹுப்பி (Issac Hoopi) என்னும் போலீஸ் அதிகாரி, உள்ளே ஓடி, உயிரோடு மக்கள் இருக்கின்றனரா என்று தேடினார். உள்ளே இருக்கும் நிலவரத்தை கண்டவுடன், சற்று வெளியே வந்து, 'என் சத்தத்தை கேட்டு அந்த சத்தத்தை பின்தொடர்ந்து வாருங்கள்' என திரும்ப திரும்ப உரத்த சத்தத்தோடே கூறிக் கொண்டே இருந்தார். அவருடைய அந்த சத்தத்தை கேட்டு அநேகர், வெளியே வந்தனர். உள்ளே ஒன்றுமே தெரியாத புரியாத நிலையில் இருந்த அவ...

உம்மண்டை கர்த்தரேநான் சேரட்டும்

Image
உம்மண்டை கர்த்தரே  நான் சேரட்டும் 12-5-1889 அன்று இங்கிலாந்தில் உள்ள ஜான்ஸ்டன் பட்டணம் மிகுந்த வெள்ளப்பெருக்கினால் சூழப்பட்டது. அங்கு ஒரு வண்டி சுழல் நீரில் சிக்கி தண்ணீரில் மூழ்க ஆரம்பித்தது. அவ்வண்டியில் கவிழ்ந்து கிடந்த ஒரு பெட்டிக்குள் ஒரு இளம் பெண் சிக்கிக் கொண்டிருந்தாள். அவள் தூர கிழக்கு நாடுகளுக்கு மிஷனரியாக செல்ல தன்னை அற்பணித்து அப்பயணத்தை மேற்கொண்டவள். கரையிலிருந்து உதவி எதுவும் செய்ய முடியாமல் தவித்த மக்களை அமைதியாக பார்த்தாள். ஒரு ஜெபம் பண்ணி விட்டு இப்பாடலை எந்தவித கலக்கமின்றி பாட ஆரம்பித்தாள். கரையிலிருந்த அனைவரும் கண்ணீர் மல்க அவளோடு பாடலில் இணைந்தார்கள். பாடிக்கொண்டிருக்கும் போதே அவள் ஆண்டவரின் சந்நிதியை சென்றடைந்தாள்.   1912 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் இங்கிலாந்து தேசம் எங்கும் ஒரே கோலாகலம். ஊரெங்கும் புதிதாய் பயணத்தை துவங்கப்போகும் அந்த அதிநவீன சொகுசு கப்பலை பற்றிய பேச்சு தான். டைட்டானிக் என்ற அந்த உலகிலேயே மிக பெரிதும் பிரமாண்டமுமான சொகுசு கப்பல். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளை சுமந்துக்கொண்டு இங்கிலாந்திலுள்ள சௌதாம்ப்டன் துறைம...

புல்லுக்கு ஒப்பான ஜீவியம்

Image
புல்லுக்கு ஒப்பான ஜீவியம் நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே. - (யாக்கோபு 4:14). ஒரு வைத்தியர் தன்னுடைய நோயாளி ஒருவரை தொடர்பு கொள்ள முயன்று கிடைக்காமல், மிகவும் கஷ்டப்பட்டு கடைசியில் ஒருவகையாக டெலிபோன் மூலமாக அவரை தொடர்பு கொண்டு, 'நீங்கள் செய்த பரிசோதனைகளின் ரிசல்ட் வந்து விட்டது. உங்களுக்கு கெட்ட செய்தி முதலில் தெரிய வேண்டுமா? அல்லது அதைவிட மிக மோசமான செய்தி தெரிய வேண்டுமா?' என்று கேட்டார். அப்போது நோயாளி, 'முதலில் எனக்கு கெட்ட செய்தியை சொல்லுங்கள்' என்று கூறவும், டாக்டர், 'நீங்கள் இன்னும் ஒரு நாள் தான் உயிரோடு இருப்பீர்கள்' என்று கூறினார். அதற்கு நோயாளி, ஐயோ, இதைவிட கெட்ட செய்தி ஒன்றுமில்லை, ஆனால் நீங்கள் சொன்னீர்களே, இதை விட மோசமான செய்தி என்று, அது என்ன? என்று கேட்டபோது, டாக்டர், 'இந்த ரிசல்டை சொல்ல நான் நேற்றிலிருந்து முயற்சி செய்திருக்கிறேன்' என்று கூறினார். நம்முடைய வாழ்க்கை கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறது...

இரண்டு குடும்பங்கள்

Image
இரண்டு குடும்பங்கள்  நோவாவின் நாட்களில் நடந்தது போல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும். நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள்வரைக்கும் ஜனங்கள் புசித்துக் குடித்தார்கள், பெண்கொண்டு கொடுத்தார்கள்; ஜலப்பிரளயம்வந்து எல்லாரையும் அழித்துப்போட்டது. லோத்தினுடைய நாட்களில் நடந்ததுபோலவும் நடக்கும்; ஜனங்கள் புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார்கள், விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள். லோத்து சோதோமை விட்டுப் புறப்பட்ட நாளிலே வானத்திலிருந்து அக்கினியும் கந்தகமும் வருஷித்து, எல்லாரையும் அழித்துப்போட்டது. மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும். - (லூக்கா 17:26-30). மேற்கண்ட வசனங்களில் இரண்டு பழைய ஏற்பாட்டு நீதிமான்களை குறித்து காண்கிறோம். இயேசுகிறிஸ்து வரப்போகும் இந்த கடைசி நாட்களில் இந்த நீதிமான்களின் நாட்களில் நடந்ததுப்போல நடக்கும் என்று வேதம் எச்சரிக்கிறது. இந்த இரண்டு நீதிமான்களும் குடும்பங்களை உடையவர்களாயிருந்தார்கள். இவர்கள் குடும்பங்களிலிருந்து நாம் கற்று கொள்ள வேண்டிய பாடத்தை இந்த நாளில் கற்று கொள்வோம். முதலாவது நோவா அவர் காலத்தில் உலகம் ஜலப்பிரளயத்தினால் அழிக்கப்பட்...

முந்தினோர் பிந்தினர், பிந்தினோர் முந்தினர்

Image
முந்தினோர் பிந்தினர், பிந்தினோர் முந்தினர்  "சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்." (எபிரேயர் 10:25) அமெரிக்க  (American) போதகர் ஒருவர் தன்னுடைய சபை மக்களை பார்த்து இப்படியாய் பிரசங்கம் பண்ண ஆரம்பித்தார். எனக்கு முன்பாக 22 பேர் அமர்ந்திருந்தார்கள், நான் அவர்களை பார்த்து ! நாம் இப்பொழுது கைது செய்யப்பட்டால் என்ன ஆகும் என்று கேட்டேன் ? அதற்கு  அவர்கள் நிங்கள் நாட்டை விட்டு 24 மணி நேரத்தில் வெளியேற்றப்படுவீர்கள், நாங்கள் 3 ஆண்டு கடுங்காவலில் வைக்கபடுவோம் என்றார்கள். அதற்கு நான் நீங்கள் எத்தனை பேர் விசுவாசத்திற்க்காக காவலில் இருந்திருக்கிறீர்கள் என்று கேட்டேன், 22 பேரில் 18 பேர் தங்கள் கைகளை உயர்தினார்கள், நான் ஆச்சரியத்தில் ஆழ்ந்தேன், அவர்கள் எல்லாரும் இரகசிய சபைகளின் தலைவர்கள், எனவே அவர்களிடம் உங்களுக்கு கீழ் உள்ள சபைகளின் உறுப்பினர்கள் எங்வளவு பேர் என்று கேட்டேன், அவர்கள் கணக்கிட்டு எங்களிடம் 2 கோடிக்கும் மேல் இரு...

அறுவடை காலம்

Image
அறுவடை காலம்  'முதலாவது நீங்கள் அறியவேண்டியது என்னவெனில்: கடைசிநாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுய இச்சைகளின்படியே நடந்து, அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின்தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள். தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்' - (2 பேதுரு 3,4,9). ஒரு சிலந்தி பூச்சி நெற்பயிரின் வயலில் தன் கூட்டை கட்டி வாழ்ந்து வந்தது. அந்த கூட்டில் சிக்கும் சிறு பூச்சிகளை தன் இரையாக உண்டு தன் காலத்தை சந்தோஷமாக கழித்து வந்தது. ஒரு நாள் ஒரு சிறு பூச்சி அதில் மாட்டி கொண்டது. சிலந்தி அதை இரையாக்க முயன்றபோது, அந்த பூச்சி சிலந்தியிடம், நீ என்னை சாப்பிடாமல் விட்டுவிட்டால், நீ உன் உயிரை காப்பாற்றி கொள்ளும்படியான ஒரு முக்கிய செய்தியை உனக்கு சொல்லுவேன்' என்றது. சிலந்தி ஒரு சிரிப்பு சிரித்து விட்டு, 'என்ன செய்தி' என்று...

கிறிஸ்துவுடனுள்ள அனுபவம்

Image
கிறிஸ்துவுடனுள்ள அனுபவம்  உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. - (யோவான் 1:9). மாலை மயங்குகிற வேளையில் ஒரு சிறுவன் மிதிவண்டியில் சாலையில் சென்று கொண்டிருந்தான். அவன் வருவதை பார்த்த ஒரு போலீஸ்காரர் அவனது சைக்கிளை நிறுத்தி, 'தம்பி, டைனமோ லைட்டை எரிய செய்யாமல் ஏன் சைக்கிளை ஓட்டி வருகிறாய்?' என்று கேட்டார். உடனே அவன், 'இந்த சாலையின் இருபுறமும் அநேக விளக்குகள் எரிகின்றன. பட்டப்பகலை போல வெளிச்சமாக உள்ளது. என் சைக்கிளில் வெளிச்சமில்லாதது குற்றமா? என்றான். இதை கேட்ட போலீஸ்காரர் அவனை சாலையின் ஒரு ஓரமாக அழைத்து சென்று அவனது சைக்கிளின் பின் சக்கரத்திலிருந்த காற்றை பிடுங்கி விட்டார். 'காற்று எல்லா இடத்திலும்தான் உள்ளது. ஆனால் உன் சைக்கிளில் காற்று இல்லை என்றால் உன்னால் ஓட்டி செல்ல முடியுமா?' என்றார். இந்த காரியம் சிறுவனை கோபமடைய செய்தாலும் சற்று நேரத்தில் அது அவனை சிந்திக்க வைத்தது. இதை வாசிக்கும் அன்பானவர்களே, உங்கள் உள்ளத்தில் ஒளி உண்டா? இருள் இருக்கும் இடத்தில் பாவமும் பயமும் குடி கொள்ளும். வேத புத்தகத்தில் இருள் பிசாசையும் அவன...

சவுல் மரித்த காரணம்

Image
சவுல் மரித்த காரணம்  'அப்படியே சவுல் கர்த்தருடைய வார்த்தையைக் கைக்கொள்ளாமல், கர்த்தருக்குச் செய்த தன் துரோகத்தினிமித்தமும், அவன் கர்த்தரைத் தேடாமல் அஞ்சனம் பார்க்கிறவர்களைக் கேட்கும்படிக்குத் தேடினதினிமித்தமும் செத்துப்போனான்' - (1 நாளாகமம் 10:13). இஸ்ரவேலின் முதல் இராஜா என்னும் பெருமையை பெற்ற சவுல், தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட சவுல், சவுந்தரியமான வாலிபனாகிய சவுல், இஸ்ரவேல் புத்திரரில் அவனைப்பார்க்கிலும் சவுந்தரியவான்; எல்லா ஜனங்களும் அவன் தோளுக்குக் கீழாயிருக்கத்தக்க உயரமுள்ளவனாயிருந்தான் என்று சொல்லத்தக்கதான சவுல், மேலே குறிப்பிட்ட தேவ வார்த்தைகளின்படி செய்தததினிமித்தம் மரித்து போனான். 'அதற்காக அவர் அவனைக் கொன்று, ராஜ்யபாரத்தை ஈசாயின் குமாரனாகிய தாவீது வசமாகத் திருப்பினார்' (1 நாளாகமம் 10:14) என்று வேதத்தில் பார்க்கிறோம். எத்தனை ஒரு பயங்கரமான நிலைமை! சவுல் மரித்து போனான், நாம் நம்முடைய வாழ்க்கையை ஜாக்கிரதையாய் காத்து கொள்ளும்படியாக, சவுலின் வாழ்க்கையிலிருந்து கற்று கொள்ள வேண்டிய பாடங்கள் உண்டு. சவுல் போரில் மரித்து போனான் என்று வேதத்தில் எழுதப்படவில்லை, ...

பாவ அறிக்கை

Image
பாவ அறிக்கை  நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்; என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன்; தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர். - (சங்கீதம் 32:5). 1983-ம் ஆண்டு, கார்லா டக்கர் (Karla Tucker) என்னும் பெண், இரண்டு பேரை கொடூரமாக கொலை செய்தாள். அதினால் அவள் சிறையிலிருந்தபோது, கிறிஸ்துவை குறித்து கேள்விபட்டு, தன் பாவங்களை அறிக்கையிட்டு, அவரை தன் சொந்த இரட்சகராக ஏற்று கொண்டாள். அதன் பின் அவள் வாழ்க்கை மாறியது. மற்றவர்களுக்கு உதவுபவளாக, தன் நடத்தையில் நன்கு முன்னேறியதால், அவளை தூக்குதண்டனையிலிருந்து, ஆயுட்கால சிறைக்கு மாற்றுவார்கள் என அவளோடு இருந்த அநேகர் நினைத்தனர். ஆனால், அவள் அனுப்பிய மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 1998-ம் ஆண்டு அவள் தூக்கிலிடப்பட்டாள். வேதத்தில் ஆகான் என்னும் ஒருவனும் தான் செய்த பாவத்தை அறிக்கையிட்டான். 'அப்பொழுது ஆகான் யோசுவாவுக்குப் பிரதியுத்தரமாக: மெய்யாகவே நான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன்; இன்னின்ன பிரகாரமாகச் செய்தேன். கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையைய...

ஜீவாதாரபலியாகிய இயேசு கிறிஸ்து

Image
ஜீவாதாரபலியாகிய இயேசு கிறிஸ்து  தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர். - (சங்கீதம் 46:1). ஐரோப்பாவின் வடக்கில் உள்ள நாடுகளில் காடுகள் ஏராளம். அங்குள்ள ஒரு காட்டிற்கு சென்று, இன்பமாக நாளை கழிக்கலாமென்று ஒரு நண்பர் கூட்டம் எண்ணியது. அவர்கள் சுமார் பதினைந்து பேர் இருப்பார்கள். இரண்டு மூன்று வீட்டினர் ஒன்றாக வந்திருந்தனர். சமைத்த பண்டங்களை சாப்பிட்டபின் பேசி கொண்டிருக்கையில் தொலைவில் கண்ட ஒரு காட்சி அவர்களை அப்படியே தூக்கி வாரிப்போட்டது. என்னது புகை? நெருப்பு? அக்காட்டில் ஒரு பகுதியில் மூங்கில் போன்ற மரங்கள் ஒன்றோடொன்று மோதி உராய்ந்ததன் விளவாக தீப்பொறி பறந்தது. அது பெருந்தீயாக காட்டையே பற்றி கொண்டது. அதை கண்ணுற்ற அவர்கள் தங்களுக்கு இறுதிகட்டம் வந்தது என்று அறிந்து வேதனைப்பட்டனர். இந்த நிலையில் இத்தீயை சமாளிக்க சிறுவன் ஒருவன் முன் வந்தான். கையிலிருந்த தீப்பெட்டியினுள் ஒரு தீக்குச்சியை எடுத்து உரசி பின்பு சருகுகள் நிறைந்த இடத்தில் அதை போட்டான். காட்டுத்தீ பரவி தங்களை நோக்கி வருவதற்குள் இந்த பையன் வேறு பக்கத்திலேயே நெருப்பு வைத்து விட்டானே ...

பெருமையின் பலன்

Image
பெருமையின் பலன்  தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான். - மத்தேயு. 23:12. தனது 26 ஆவது வயதில் நெப்போலியன் போனபார்ட் (Nepolean Bonaparte) இத்தாலியிலுள்ள பிரஞ்ச் இராணுவத்தின் தளபதியானார். 1804ல் அவர் 35 வயதாவதற்குள், பிரஞ்ச் நாட்டின் அரசனானார். பிரஞ்ச் அதிபர்களுக்கும், கத்தோலிக்க போப்களுக்கும் இடையில், கசப்பான உறவுமுறை இருந்த போதிலும், பிரான்ஸின் அரசாங்க மதமாக கத்தோலிக்க மதமே இருந்து வந்தது. பிரான்ஸ் நாட்டின் முதல் மன்னனாக நெப்போலியன் முடிசூட்டி கொள்வதற்காக போப்பையும் அழைத்திருந்தான். முடிசூட்டும் விழா Notre Dam என்னும் இடத்திலுள்ள பெரிய கதீட்ரலில் (Cathedral) 1804-ல் டிசம்பர் மாதம் 2ம் தேதி நடைபெற்றது. அந்நாளில், போப்பும், அவருடன் கார்டினல்களும், மேலே ஆல்டர் இருக்கும் இடத்தில் காத்திருக்க, நெப்போலியன் தன் மனைவி ஜோஸப்பினின் கைகளைப் பிடித்தபடி நடந்து மேலே ஏறினான். அனைவர் கண்களும் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்க, இப்போது போப்பின் முன் முழங்கால் படியிடுவான் என அனைவரும் எதிர்ப்பார்த்திருக்க, மேலே ஏறிப் போன நெப்போலியன், போப்பின் கைய...

இளைப்பாறுதல் தரும் சிலுவையின் நிழல்

Image
இளைப்பாறுதல் தரும் சிலுவையின் நிழல்  தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது! அதினால் மனுபுத்திரர் உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள். - (சங்கீதம் 36:7). வெயிலின் கொடுமையை தாங்க முடியாமல் ஒரு முட்செடியின் கொஞ்ச நிழலில் ஒரு கருநாகம் தனது வாலின் துணையுடன் தன் வயிறு வெப்பத்தினால் பாதிக்காதபடி நின்று கொண்டிருந்தது. அதன் நிழல் சற்று கீழே விழுந்தது. அந்த நேரம் நிழலுக்காக தவித்து, திரிந்த தவளை அந்த நிழலை கண்டு சந்தோஷமாக ஓடி வந்தது. ஓரக்கண்ணால் தவளையை பார்த்த கருநாகம் அதை என்ன செய்திருக்கும்? அது நம் அனைவருக்கும் தெரிந்ததே! வேதத்திலே உவமைகள் மூலமாக தேவன் நமக்கு அநேக காரியங்களை தெளிவுப்படுத்துவதை நாம் வாசித்திருக்கிறோம். நியாயாதிபதிகள் 9ம் அதிகாரத்திலுள்ள ஒரு உவமை இவ்வாறு கூறுகிறது, எல்லா மரங்களும் தங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தும்படி ஒலிவ மரத்திடம் சென்றன. ஆனால் ஒலிவ மரமோ அந்த அழைப்பை மறுத்து 'என்னிலுள்ள கொழுமையை விட்டுவிட்டு அரசாளப் போவேனோ' என்றது. இரண்டாவதாக அத்திமரமும், மூன்றாவதாக திராட்சை செடியும் அந்த அழைப்பை நிராகரித்தன. முடிவில் முட்செடியானது, மரங்களை பார்த்...

முழங்காலின் ஜெபம்

Image
முழங்காலின் ஜெபம்  'ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும் போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்' - (மாற்கு 11:24). ஒரு மிஷனெரி நிறுவனமானது மிஷனெரி ஒருவரை குறிப்பிட்ட பட்டணத்திற்கு ஊழியம் செய்ய அனுப்பியது. உற்சாகமாக சென்ற அவர் அப்பட்டணத்தை சுற்றி பார்த்தார். ஓரிரு நாட்களில் ஊழியத்தை ஆரம்பித்தார். மாதங்கள் பல உருண்டோடின. எவரும் இவரது போதனைக்கு செவிசாய்க்கவில்லை. மக்கள் மிகவும் முரட்டாட்டம் மிக்கவர்களாய் மனம் போன போக்கில் வாழ்ந்து வந்தனர். தினமும் இடைவிடாமல் ஊழியம் செய்தும் ஒரு சிலரை கூட மாற்ற முடியவில்லை. எனவே மிகவும் சோர்வுற்றவராக எனது எல்லா முயற்சியும் பயனற்று போய் விட்டதே என்று நினைத்தவராக பட்டணத்தின் இன்னொரு பகுதிக்கு வந்தார். அங்குள்ள சாலை அருகில் கல் உடைக்கும் ஒருவரை பார்த்தார். பெரிய பெரிய கற்களை அவர் சம்மட்டியால் உடைத்து கொண்டிருந்தார். ஊழியர் அவரிடம் சென்று, 'ஐயா உங்களால் எப்படி இவ்வளவு பெரிய கடினமான பாறைகளை உடைக்க முடிகிறது?' என்று கேட்டார். அதற்கு கல் உடைப...

இயேசு நம்மோடு என்றும்

Image
இயேசு நம்மோடு என்றும்  நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்து கொண்டு உத்தமனாயிரு. - (ஆதியாகமம் 17:1).   பட்டணத்தில் வசிக்கும் பெண் ஒருத்தி தன் போதகரிடம் வந்து, நான் எப்படி ஆடையணிய வேண்டும் என்று கேட்டாள். அதற்கு அவர் 'உன் சுடிதார் இவ்வளவு நீளம் இருக்க வேண்டும், உன் சட்டையின் கழுத்து இவ்வளவு குறைவாக இருக்க வேண்டுமென்று சொல்ல நான் ஒரு டெய்லர் இல்லை, நான் ஒரு ஊழியன். ஆகவே நீ எப்படி ஆடையணிய வேண்டுமென்று கூறுகிறேன் என்றால், உன் வீட்டிற்கு அடுத்த தெருவில் இயேசு வாழ்ந்து கொண்டிருக்கிறார் என வைத்து கொள். ஒரு நாள் இயேசு உனக்கு போன் பண்ணி என்னுடைய வீட்டிற்கு வா என்று சொல்கிறார். நாம் இருவரும் ஒரு இடத்திற்கு செல்ல வேண்டுமென்கிறார். அவருடன் செல்ல நீ எவ்வித ஆடையணிவாயோ அது போலவே ஒவ்வொரு நாளும் ஆடையணி' என்றார். அதை தொடர்ந்து அவர் கூறியதாவது, 'நீங்கள் எப்படிப்பட்ட ஆடையணிந்து இயேசுவை பார்க்க முடியுமோ அப்படிப்பட்ட ஆடையே அணியுங்கள். இயேசுவோடு நடக்கும்போது இப்படிப்பட்ட ஆடையை அணியக்கூடாது என்று உங்கள் மனச்சாட்சி உறுத்துமென்றால் அப்படிப்பட்டதை அணிய வேண்டாம். சில பெற்றோர...

கோதுமை மணி

Image
கோதுமை மணி  துன்மார்க்கன் தன் தீமையிலே வாரிக்கொள்ளப்படுவான்; நீதிமானோ தன் மரணத்திலே நம்பிக்கையுள்ளவன். - (நீதிமொழிகள் 14:32). போதகர் பால் யாங்கி சோ அவர்கள் கீழ்கண்ட சம்பவத்தை கூறினார்கள். கொரியாவில் நடந்த போரில் 500 கிறிஸ்தவ போதகர்களை பிடித்து, உடனே அவர்களை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினார்கள். 2000 தேவாலயங்கள் சூறையாடப்படடு எரிக்கப்பட்டது. மற்றும் கொரியாவில் Inchon என்னுமிடத்தில் கம்யூனிச தலைவர்கள் ஒரு போதகரை அவரையும் அவரது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளை குடும்பத்தோடு பிடித்து, அவர்களை ஒரு பெரிய குழியில் வைத்து, அந்த போதகரிடம், ‘இத்தனை வருடங்கள் நீர் இந்த மக்களை வேதாகமம் என்னும் புத்தகத்தை வைத்து, அநேக மூடநம்பிக்கைகளுக்குள் நடத்தி இருக்கிறீர்.  இப்போது இந்த மக்களின் முன் நீர் கிறிஸ்துவை மறுதலிக்க வேண்டும். மறுதலித்தால் நீரும் உம்முடைய குடும்பமும் தப்புவிக்கப்படுவீர்கள். இல்லையென்றால், முதலாவது உம்முடைய பிள்ளைகளையும் பின் உங்களையும் இந்த குழியில் உயிரோடு புதைத்து விடுவோம்’ என்று பயமுறுத்தினர். அதை கேட்ட பிள்ளைகள், ‘அப்பா, அப்பா எங்களை நினைத்து கொள்ளுங்கள். ...

பக்தி வைராக்கியம்

Image
பக்தி வைராக்கியம்  அப்பொழுது: உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் என்னைப் பட்சித்தது என்று எழுதியிருக்கிறதை அவருடைய சீஷர்கள் நினைவுகூர்ந்தார்கள். - (யோவான் 2:17). பில்லிகிரஹாம் பொது கூட்டமொன்றில் கடிதம் ஒன்றை வாசித்தார். அது அமெரிக்க நாட்டு கல்லூரி மாணவன் ஒருவனால் எழுதப்பட்டிருந்தது. அவன் மெக்ஸிகோவிலிருந்த போது ஒரு கம்யூனிஸ்டாக மாறி விட்டான். அதினால் தான் விரும்பிய பெண்ணின் உறவை முறிக்க அவன் எழுதிய கடிதம் அது. கடித்தத்தில் அவன் எழுதியிருந்தது: 'கம்யூனிஸ்டுகளாகிய எங்களுக்குள் மரண விபத்துகள் அதிகம். எங்கள் நடுவில் சுட்டு கொல்லப்படுகிறவர்களும், தூக்கிலிடப்படுபவர்களும், உயிரோடு வைத்து கொல்ல்பபடுகிறவர்களும், சிறையில் அடைக்கப்படுகிறவர்களும் ஏராளம், ஏராளம். நாங்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு பைசாவையும் கட்சிக்கு கொடுத்து விடுகிறோம். பொழுதுபோக்குகளாகிய படம், கச்சேரி, நடனம், ஆகியவற்றிற்கு செல்ல நேரமோ, பணமோ எங்களுக்கு கிடையாது. உலகம் முழுவதும் கம்யூனிச (கடவுள் இல்லை என்கிற கொள்கை) மயமாக்க வேண்டுமென்பதே எங்கள் ஒரே இலட்சியம்.  கம்யூனிஸ்டுகளாகிய எங்களுக்கு ஒரு வாழ்க்க...

பாடுவேன் பரவசமாகுவேன்

Image
பாடுவேன் பரவசமாகுவேன்  துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினாலே நிறைந்து; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி.. - (எபேசியர் 5:18-21). ஒரு தாய் எப்போதும் ‘எருசலேம் என் ஆலயம் ஆசித்த வீடதே’ என்னும் பாடலை பாடி கொண்டிருப்பார்கள். அதைக் கேட்டு கேட்டு, அவர்களுடைய சிறிய மகன் அந்தப் பாட்டின் வார்த்தைகளை மனப்பாடமாய் கற்று வைத்திருந்தான். அந்த தாயார் அவனது சிறு வயதிலேயே மரித்து போனதால், அவன் வாலிபனானபோது, அவன் வேண்டாத நண்பர்களோடு சேர்ந்து, தன் வாழ்வை கெடுத்து, குடி போதை மருந்துகள் போன்ற கெட்ட வழக்கங்களுக்கு அடிமையாகி, உயிர் போகும் நிலையில் ஒரு ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்க்கப்பட்டான்.  அப்போது அவனுக்கு மருந்துக் கொடுக்க வந்த ஒரு செவிலி பெண், அவனது படுக்கையை ஒழுங்குப்படுத்தி கொண்டே, அந்தப் பாடலை மெதுவாக பாடிக்கொண்டு தன் வேலையை செய்துக்கொண்டிருந்தாள். அதை கேட்ட அந்த வாலிபனுக்கு, பழைய நினைவுகள் வரத்தொடங்கின. தன் தாயின் ஞாபகம் வந்து, அவன் க...

அவர் நேரத்தில்

Image
அவர் நேரத்தில் அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். - (ரோமர் 8:28). ராபர்ட் மேத்தியூ என்பவர், தனது மனைவி கர்ப்பிணியாய் இருப்பதை சில வாரங்களுக்கு முன்தான் குடும்பமாய் அறிந்திருந்தனர். அவர்கள் விர்ஜினியா என்னும் அமெரிக்க நகரத்தில் வசித்து வந்தார்கள். மனைவி கலிபோர்னியாவில் உள்ள தன் சகோதரியை பார்க்க வேண்டும் என்று ஆவலாய் இருந்தபடியால், அதற்கென்று திட்டமிட்டு அவர்கள் அடுத்த நாள் தயாரானார்கள். அன்று செப்டம்பர் மாதம் 10ம் தேதி. அவர்கள் தயாராகி, காரில் போய் கொண்டிருந்தபோது, இருவரும் ஜெபித்தார்கள். தன் மனைவியின் இந்த கலிபோர்னியா போய் வரும் திட்டம் நல்லபடியாக முடியவேண்டும் என்று அவர் ஜெபித்து ஆமென் என்று சொல்வதற்கும், காரின் டயர் வெடிப்பதற்கும் சரியாக இருந்தது. உடனே வேகமாக அந்த காரின் டயரை மாற்றி, புறப்பட்டு ஏர்போர்ட் போவதற்குள் அவர்கள் செல்ல வேண்டிய பிளேனை மிஸ் பண்ணி விட்டார்கள். அடுத்த நாள் ராபர்ட் மேத்தியூவின் அப்பாவிடமிருந்து டெலிபோன் வந்தது. எந்த பிளேனில் அவருடைய...

அக்கினி மதிலாய் காக்கும் தேவன்

Image
அக்கினி மதிலாய் காக்கும் தேவன்  'நான் அதற்குச் சுற்றிலும் அக்கினிமதிலாயிருந்து, அதின் நடுவில் மகிமையாக இருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்'. - (சகரியா 2:5). மத்திய ஆப்பிரிக்காவில் எட்டு நாடுகளுக்குள் இன்னும் போர் நடந்து கொண்டுதான் இருக்கிறது. மற்ற இடங்களிலிருந்து வந்து, இங்குள்ளவர்களை கொல்வதும், சித்திரவதை செய்வதும் சகஜமான செயல்களாகி விட்டன. ஆனால் கர்த்தரின் மக்கள் ஜெபிக்கும்போது, தேவன் இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புதமாக இந்த நாள் வரை பாதுகாக்கிற தேவனாக இருக்கிறார். ஒரு நாள் ஹிட்டு (Hutu) என்னும் கிராமத்தில் டுட்சி (Tutsi) என்னும் இடத்தின் போர் வீரர்கள் அந்த கிராமத்தை அழித்து விட வேண்டும் என்று எண்ணத்தோடு வந்தனர். அந்த இரவு நேரத்தில் ஒரு இளம் போதகரின் வீட்டிற்கு கைகளில் இயந்திர துப்பாக்கிகளுடன், உள்ளே நுழைந்து, போதகரும் அவருடைய குடும்பமும் அமர்ந்திருந்த இடத்தில் தங்கள் துப்பாக்கியை காட்டி, கொல்லபோவதாக மிரட்டினார்கள். அப்போது அந்த போதகர், 'எங்களை கொல்லுங்கள், ஆனால் அதற்கு முன் நாங்கள் குடும்பமாக ஜெபிக்க எங்களை அனுமதியுங்கள்' என்று கேட்டு கொண்டார். சரி, எப்படி...

வனாந்தரத்தில் ஊற்று

Image
வனாந்தரத்தில் ஊற்று  மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார். - (1 கொரிந்தியர் 10:13). இங்கிலாந்தை சேர்ந்த சாமுவேல் பிளிம்சோல் (Samuel Plimsoll) என்பவரின் முயற்சியால் கடலில் செல்லும் வியாபார கப்பல்களுக்கு ஒரு வரைமுறை உருவாக்கப்பட்டது. அதன்படி, ஒவ்வொரு வியாபார கப்பல்களும் எந்த அளவு எடைகளை கொண்டு செல்லலாம் என்பது நிர்ணயிக்கப்பட்டது. அதன் மூலம் நீண்ட தூரம் செல்லும் கப்பல்கள் பிரச்சனைகள் இல்லாமல் பயணம் செய்வதற்கு அந்த முறை உதவியது. இந்நாள் வரை கரைதட்டி நிற்கும் வியாபாரக் கப்பல்களில் பிளிம்சோல் லைன் என்று சொல்லப்படும் அந்த குறிகளை தண்ணீரின் மட்டத்திற்கு மேல் காணலாம். தேவனின் பார்வையில் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பிளிம்சோல் லைன் உண்டு. அதற்கு மேல் அவர் ஒருபோதும் நம் மேல் பாரத்தை ஏற்ற மாட்டார். ஒரு தகப்பனும் ஒரு மகனும் மளிகை கடைக்கு சென்று பொருட்கள் வ...

வேதத்தை வாசி

Image
வேதத்தை வாசி அநேகமாயிரம் பொன் வெள்ளியைப்பார்க்கிலும், நீர் விளம்பின வேதமே எனக்கு நலம். - (சங்கீதம் 119:72). வேதாகம ஆசிரியர் ஒருவர் தன்னுடைய கிழிந்து போன வேதாகமத்தை தூக்கி பிடித்து கொண்டு, 'ஒவ்வொரு விசுவாசியும் வேதாகமத்தை பயன்படுத்தி, ஒவ்வொரு பத்து வருடங்களில் ஒவ்வொரு வேதாகமத்தையும் சேதப்படுத்த வேண்டும்' என்றார். நம்முடைய வேதாகமங்கள் படிப்படியாக தாமாகவே கிழிந்து போகும் அளவிற்கு நாம் அவற்றை பயன்படுத்த வேண்டும் என்பதே அவருடைய கருத்தாகும்.  பாவத்தினால் தன் மனதை சேதப்படுத்தியவன், சேதமடையாத புத்தம் புதிய வேதாகமத்தை வைத்திருப்பான். சேதமடைந்த கிழிந்த வேதாகமத்தை வைத்திருப்பவனது மனதோ, பாவத்தினாலும் எவ்வித குற்ற உணர்வினாலும் சேதமடையாமல் பாதுகாப்பாய் இருக்கும். ஆம், நாம் ஆர்வமாய் வேதத்தை வாசிக்கிறவர்களாக இருப்பவர்களானால் நாம் சேதமடைவதற்கு பதிலாக நமது வேதாகமம் சேதமடையும். நமது பாவத்தை உணர்த்தி, மனச்சாட்சியை கூர்மையாக்கி நம்மை உணர்வுளளவர்களாக மாற்றும் உயிருள்ள வார்த்தைகளடங்கிய புத்தகமே நம் வேதாகமம். தினமும் நேரமிருந்தால் மட்டுமே வாசிப்பவர்கள், விடுமுறை நாட்களில் மட்டும் வாசிப்பவ...

அள்ள அள்ள குறையாத அன்பு

Image
அள்ள அள்ள குறையாத அன்பு  நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார். - (யோவான் 13:34). சிங்சிங் (Singsing) என்பது உலகபிரசித்தி பெற்ற சிறைச்சாலைகளில் ஒன்றாகும். அதில் மிகவும் மோசமான கொலை குற்றவாளிகளை தனிமையில் அங்கு அடைப்பது வழக்கம். அந்த சிறைச்சாலைக்கு பின்னால் கர்த்தர் பெரிய காரியங்கள் செய்திருக்கின்றார். உலகத்தில் வந்த எந்த மனிதனையும் பிரகாசிப்பிக்கின்ற ஒளியான இயேசுகிறிஸ்துவின் அன்பு, கொலையாளிகளாகிய அவர்களையும் மாற்றி, தேவனின் அன்பை அவர்கள் ருசித்து பார்க்கும்படியான கிருபையை அவர்களும் பெற்றார்கள். கிறிஸ்து அந்த இடத்தில் பிரத்யேகமாக வரவில்லை, ஆனால் கிறிஸ்து தனக்குள் இருந்ததால், அவரை அந்த கொடும் சிறையிலும் கொண்டு வந்து, அவருடைய அன்பை வெளிப்படுத்தினார்கள் ஒரு அம்மையார்! அவர்கள் தான் கேத்தரின் லூயிஸ்! (Catherine Lewis – Lawes). அந்த சிற...